வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரணது நடைபெற்று வருகிறது.
பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் படு பங்க தோல்வியடைந்தது. அடுத்து தொடங்கிய 2வது போட்டியிலும் ஆண்டிகுவா நார்த் சவுண்டில் நடைபெற்ற பட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என்று மிக மோசமாக இழந்து வெஸ்ட் இண்டீஸ்டம் பறிகொடுத்தது .
இந்தபடு பங்மான தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் கூறுகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு இன்னிங்சிலும் 200 ரன்களுக்கும் குறைவாக அடித்தால் எப்படி அதிகமான போட்டிகளில் வெற்றிபெற இயலும் முடியாது.ஆனால் அணி இந்த துயரத்தில் இருந்து வெளியே வரவேண்டும். இதில் இருந்து தகுந்த பாடத்தினை கற்றுக்கொண்டு ஒரு வலிமையான் அணியாக மீண்டும் திரும்ப வேண்டும்.
மேலும் நாங்கள் போதுமான ரன்களை குவிக்கவில்லை. அணியின் அனுபவமான வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் அடிக்காத முடியாத போது எப்படி மற்ற வீரர்கள் ரன்கள் குவிப்பது மிகவும் சிரமம்.இரண்டு டெஸ்டிலும் நாம் செய்ததைவிட சிறப்பாக செயல்பட முயற்சி செய்ய வேண்டும். அல்லது அணியில் சில விஷயங்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இந்த வாய்ப்புகள் எல்லாம் ஒரு தனி வீரர்களிடம் இருந்து வரவேண்டும்.
என்னால் எப்படி 11 வீரர்களுக்காக பேட்டிங் செய்ய இயலாதோ. அதேபோல தான் தலைமை பயிற்சியாளரான பெய்லிஸ் அல்லது பேட்டிங் பயிற்சியாளர் மார்க் ராம்பிரகாஷ் ஆகியோர் வந்தும் பேட்டிங் செய்ய இயலாது.பொறுப்பானது தனி மனிதர்களிடம் இருந்து மட்டுமே வர வேண்டும். ஆனால் அணியில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒரு குரூப்பாக ஒன்று சேர்ந்து அடுத்த டெஸ்டில் நமது வலிமையை காண்பித்து பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்.