வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும்…ஸ்டாலின் கண்டனம்…!!

கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த படுகொலைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார.மேலும் அவர் தெரிவிக்கையில் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எந்த மதத்தினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment