அவசர வழக்குகள் மட்டும் விசாரணை – உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக இதன் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக   சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து கீழமை நீதிமன்ற பணிகள் ஏப்ரல்  30-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கபப்ட்டது .ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நேரிலும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல்  உயர்நீதிமன்ற மதுரை  கிளையிலும் அவசர வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அவசரமாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.