காங்கிரஸ் நிர்வாகிகள் கமலஹாசனை சந்தித்து, இடைத்தேர்தலில் ஆதரவு கோரியுள்ளனர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடவுள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அவர்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் கமலஹாசனை சந்தித்து, இடைத்தேர்தலில் ஆதரவு கோரியுள்ளனர்.