17 ஆம் தேதி வெளியாகிறது மதிமுக தேர்தல் அறிக்கை..!

மதிமுக தேர்தல் அறிக்கை வரும் 17 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் நடைபெறஉள்ளது. இதனால், திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை வரும் 17 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. சென்னை தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க ஸ்டாலினை ஆதரித்து வருகின்ற 18-ஆம் தேதி வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

author avatar
murugan