EIA2020 : இது இறுதியானது அல்ல – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிவிக்கை இறுதியானது அல்ல” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதன்படி, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் திட்டமாக இருப்பின் அதற்கு அனுமதி மறுக்கவும் ,ஆபத்து ஏற்படுத்தாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்குவதும் குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு செய்யும்.

இதற்கிடையில்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது. ஆனால்  “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020”  வரைவிற்கு  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிவிக்கை இறுதியானது அல்ல” . சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.