பிரேசிலில் 1,00,000-ஐ கடந்த கொரோனா பலி..1,000 சிவப்பு பலூன்களை வானத்தில் விட்டு அஞ்சலி.!

பிரேசிலில் 1,00,000-ஐ கடந்த கொரோனா பலி..1,000 சிவப்பு பலூன்களை வானத்தில் விட்டு அஞ்சலி.!

பிரேசிலில் கடந்த சனிக்கிழமை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,00,000 தாண்டியது.

210 மில்லியன் மக்களைக் கொண்ட அந்நாட்டில் மே மாத இறுதியில் இருந்து தொற்றுநோயால் தினமும்  1,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவு செய்து வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேர காலத்தில் 905 பேர் பதிவாகியுள்ளது.

இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை

3,012,412 ஆக இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசில் இறப்பு மற்றும் தொற்று எண்ணிக்கை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. மேலும், பல நாடுகளைப் போலவே அதிக எண்ணிக்கையிலான சோதனை மேற்கொண்டதன் மூலம் தோற்று அதிகரித்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை கொரோனா  பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரசு சாரா குழு ‘ரியோ டி பாஸ்’ புகழ்பெற்ற கோபகபனா கடற்கரையில் மணல் மீது சிலுவைகளை வைத்து 1,000 சிவப்பு பலூன்களை வானத்தில் வெளியிட்டது.

பிரேசில் 100,000 க்கும் அதிகமான இறப்புகளை அடைந்த நாளில் மத்திய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு செயலகம் முன்னாள் நீதி மந்திரி செர்ஜியோ மோரோவின் தொற்றுநோயை நிர்வகிப்பதற்காக சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எழுப்பியது .

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube