அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பிரமாண்டமாக நடைபெற இருக்கும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளில் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறார்கள்.

கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ஆம் தேதி நண்பகல் 12.45 மணி அளவில் குழந்தை ராமர் சிலையும் வைக்கப்படவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த நாளில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்து இருந்தார்.

சபரிமலையில் முன்பதிவை நிறுத்த தேவசம் போர்டு முடிவு..!

மேலும், இந்த கும்பாபிஷே விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கவேண்டும் என்பதால், இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடியின் அறிவுரைப்படி,பல அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுனமூர்த்தி உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்கள்.

அவரை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இன்று எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து  அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழைவிழா குழு நிர்வாகிகளான பிரகாஷ், ராம்குமார் ஆகியோர் சேர்ந்து வழங்கினார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.