அயோத்தி குழந்தை ராமருக்கு தினமும் ஒரு மணிநேரம் ஓய்வு!

ram lalla

கடந்த மாதம் 22ம் தேதி உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது, கோவில் கருவறையில் குழந்தை ராமர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்து, முதல் ஆளாக பால ராமரை பூஜை செய்து வழிபட்டார். இதன்பின், அயோத்தியில் குழந்தை ராமரை தரிசிக்க பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், ராமரை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால், இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் வளாகத்தில் மத்திய … Read more

ராமர் கோயில் பேரணி…13 பேர் கைது ..!

Ayodhya

அயோத்தியில் ராமர் கோயில்  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மும்பையை ஒட்டியுள்ள மீரா பயந்தர் பகுதியில் வாகனப் பேரணிக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணியளவில் மீரா நகர் பகுதியில் வாகனப் பேரணியின் போது இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மீரா நகர் பகுதியில் அயோத்தி ராமர் கோயில்  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  கார்களிலும் ,  மோட்டார் சைக்கிள்களிலும் ஏராளமானோர்  ராமரைப் புகழ்ந்து கோஷங்களை எழுப்பி கொண்டும், … Read more

அயோத்தியில் புதிய மசூதி கட்டும்பணி எப்போது தொடக்கம்? மசூதி அறக்கட்டளை தகவல்!

New mosque

அயோத்தியில் புதிய மசூதி கட்டும் பணி வரும் மே மாதம் தொடங்கும் என்று மசூதி திட்டத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு அளித்து, அதில், ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. அதேபோல, புதிய மசூதி கட்டுவதற்கு உத்தரப்பிரதேச சுன்னி வக்பு வாரியத்திடம் தனியாக 5 ஏக்கர் நிலமும் ஒப்படைக்கப்பட்டது. இதில், … Read more

இன்றுதான் தீபாவளி… ஜன.22-ஐ யாரும் மறக்கமாட்டார்கள் – அயோத்தியில் பிரதமர் மோடி உரை

pm modi

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இவ்விழாவில் பங்கேற்று பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். இதன்பின், முதலாவது பூஜையாக தேங்காய் மற்றும் பழங்கள் வைத்து தீபராதனை காட்டி ஸ்ரீ ராம பகவானை பிரதமர் மோடி வழிபட்டார். பிரதமரை தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் ராமரை வழிபட்டனர். இதன்பின் குழந்தை ராமருக்கு பல்வேறு … Read more

84 வினாடியில் நடத்தப்பட்ட பிராண பிரதிஷ்டை… காரணம் என்ன?

sree ramar

பெரும் சர்ச்சைக்கும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 தளங்களுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய நபர்கள் மற்றும் மக்கள் என பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி சரியாக மதியம் 12.10 மணிக்கு கோயில் கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிராண பிரதிஷ்டைக்கான பூஜைகளை தொடங்கினார். இந்த பூஜையில், … Read more

ராமர் கோயில்.. முதல் பூஜை செய்த பிரதமர் மோடி..!

Ram temple

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் சடங்குகளின் போது கருவறைக்குள் இருந்தனர். இந்நிலையில், … Read more

வரலாற்று நிகழ்வு.! திறக்கப்பட்ட ராமர் சிலை.! பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.!

ram temple

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், லட்சக்கணக்கான மக்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. ராமர் கோயிலில், பால ராமர் சிலை பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் … Read more

அயோத்தி ராமர் கோயிலின் சிறப்புகள்… இரும்பு இல்லாமல் பிரமாண்ட கட்டுமானம்!

Ram Temple Special

அயோத்தியில் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்னும் சிறிது நேரத்தில் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. இன்று நண்பகல் 12.20 மணியில் இருந்து 1 மணிக்குள் பால ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்து வைக்கிறார். துல்லியமாக நண்பகல் 12 மணி 29வது நிமிடம் 8 நொடிக்கு தொடங்கி 12:30:32 வரை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். சரியாக 84 நொடிகளில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும். இதன்பிறகு சிறப்பு பூஜைகள் ஏற்பாடு … Read more

ராமர் கோயில் விழா… சிறப்பு பூஜைகள் விவகாரம்.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

Ayodhi Ram Temple - Supreme court of India

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 12.30மணியளவில் குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலர் ராமர் கோவில் விழாவில் கலந்துகொண்டுள்ளனர். தனியார் கோயில்களில் நேரலை – போலீசார் அனுமதி தேவையில்லை! இந்த விழாவை நேரடியாக காண இந்தியாவில் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள், பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் , அன்னதானம் என பல … Read more

ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவின் நிகழ்ச்சி நிரல்.!

Ayodhya Rram Mandir

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதற்காக டன் கணக்கில் பூக்கள் மற்றும் சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விழாக்கோலம் பூண்டுள்ளது. காலை முதல் பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு, மதியம் 12.20 மணிக்கு பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறுகிறது. கோயில் திறப்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 11 நாட்களாக விரதம் … Read more