மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ட்வீட்…!

மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ட்வீட்.

ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இவருக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் முதலவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மீராபாய் சானுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்கள் விளையாட்டு வீரர்கள் இன்னும் பல பதக்கங்களை பெறுவார்கள் என்றும், எங்கள் தேசத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.