ஊரடங்கு உத்தரவு எதிரொலி: தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தமிழக அரசின் சார்பிலும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவிற்கு முன்  3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மார்ச் 21-ஆம் தேதி ரூ.220 கோடி,மார்ச்  23-ஆம் தேதி ரூ.196 கோடி, மார்ச் 24-ஆம் தேதி வரை ரூ.210 கோடி-க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.