தேர்தல் தொடர்பான பல விடயங்கள் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான பதிவுகளை நீக்குமாறு, ட்வீட்டர் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், தேர்தல் முடியும் முன்பே விதிகளை மீறி கருத்துக்கணிப்புகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.