பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க…! ஆனா பட்டாணி பருப்பு வடை சாப்பிட்டு இருக்கீங்களா…?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால் அதே பருப்பு வடையை தற்போது வித்தியாசமான முறையில், அதாவது பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பட்டாணி கால் – கிலோ
  • சின்ன வெங்காயம் – 25 கிராம்
  • பச்சை மிளகாய் – 2
  • காய்ந்த மிளகாய் – 2
  • சோம்பு  – 2 டீஸ்பூன்
  • பட்டை – ஒன்று
  • கிராம்பு – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
  • புதினா – ஒரு கைப்பிடி
  • உப்பு  – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறியபின் ஒரு கைப்பிடி பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு, மீதமுள்ள பருப்பில், உப்பு ,பட்டை கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக அரைக்க வேண்டும்.

பின் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் எடுத்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.  பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், மாவை வடை போல தட்டி பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான பட்டாணி பருப்பு வடை தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.