ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

ஜம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு.

இன்று காலை ஜம்மு – காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடமேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே நாட்டின் வடபகுதியில் உள்ள அருணாச்சலப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிற நிலையில், அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.