திருமண ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு – 5 குழந்தைகள் படுகாயம்!

திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால், அங்கு நின்றுகொண்டிருந்த 5 சிறுவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் நேற்றிரவு திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது நடைபெற்ற ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்பொழுது அருகில் நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த சிறுவர்கள் சவான், உம்மது, ரிஹான், அங்கித் மற்றும் அமீர் என அடையாளம் காணப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின் பேசிய வட்ட அலுவலர் விர்ஜா சங்கர், மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசு பையில் தீப்பொறி பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த விசாரணையில் போது மீரட்டில் சட்ட விரோதமாக இயங்கிய சில பட்டாசு தயாரிப்பாளர்களையும் கண்டறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

author avatar
Rebekal