"16 மாவட்ட மாநாடு"பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி DYFI பேரணி,பொதுக்கூட்டம்…!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் 16வது மாவட்ட மாநாடு, பேரணி, பொதுகூட்டம்  நடைபெற உள்ளது.
Image result for dyfi STUDENTS STRIKE
இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் புதிய அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்குவது,ஆரம்ப சுகாதரங்களை மேம்படுத்துவது,மதுரை மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவது,வடபழஞ்சி ஐடி பூங்கா பணிகளை துரிதப்படுத்துவது,எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி பணிகளை தொடங்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 7 ஞாயிறு மாலை 4 மணிக்கு முனாண்டிபட்டி விளக்கில் இருந்து பேரணியும்,ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் நினைவு திடலிலும், கருமாத்தூர் காக்குவீரன் கோவில் திடலில் போது கூட்டமும் நடைபெறகிறது.
No automatic alt text available.
16 மாவட்ட மாநாடும் நடைபெறவுள்ளது. மேலும் இப்பொதுகூட்டத்திற்கு  மாவட்ட தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்,மாவட்ட துணை செயலாளர் M.ஸ்டாலின் வரவேற்புரை வழங்குகிறார்,இது தவிர கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.இதில் திராளாக பங்கேற்க  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment