சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்…!துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டு

தமிழக மக்களுக்கு எதிரான திட்டத்தை அரசு அனுமதிக்காது என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில் , கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை .அதேபோல் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார் என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார்.

Leave a Comment