இந்த டீயை குடித்தால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?

துளசி தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் :

சாதாரண டீ குடிப்பதைவிட துளசியில் டீ போட்டு குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.இவ்வாறு துளசியில் டீ போட்டு குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.

துளசி :

துளசி இயற்கையிலே மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகையாகவே அனைவராலும் கருதப்படுகிறது.இதன் காரணமாகவே பல கோவில்களில் துளசி தீர்த்தத்தை அனைவருக்கும் வழங்குகின்றன.

  • துளசியில் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இதனால் ப்ரீ ராடிக்கல்களால் உண்டாகும் சேதங்களில் இருந்து உடல் திசுக்களை பாதுகாக்கின்றது.
  • துளசி டீ பருகுவதால் கார்டிசால் எனும் ஹார்மோன் அளவு குறைக்கப்பட்டு மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.துளசி வாயில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்ட்ரியாவை எதிர்த்து போராட உதவுகிறது.
  • துளசி சாப்பிடுவதால் வாயில் உள்ள துர்நாற்றம் முற்றிலும் நீங்குகிறது.துளசி இலையை கசக்கி கொண்டு அதற்கிடையில் ஒரு கிராம் மற்றும் கருமிளகு சேர்த்து சொத்தை பல் உள்ள இடத்தில் வைத்தால் பற்களில் உள்ள புழுக்கள் வெளியேறிவிடும்.
  • நீங்கள் பருகும் தேநீரில் துளசி இலையை சேர்த்து கொள்வதால் இருமல்,சளி,ஆஸ்துமா ,நுரையீரல் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் குறைய உதவுகிறது.துளசி சேர்க்கப்பட்ட நீர் பருகுவதால் சுவாச மண்டல ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.
  • மேலும் துளசியில் உள்ள யூஜினால் மூட்டுகளில் மற்றும் செரிமான பாதையில் அழற்சி எதிர்ப்பு பன்பை வழங்கி உதவுகிறது.