இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார சவாலை மத்திய அரசு கையாண்டது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்.
50 வயதான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த வார தொடக்கத்தில் கொரோனா தொற்று உறுதியான நிலையில், சில நாட்களாக அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார சவாலை மத்திய அரசு கையாண்டது குறித்து பேசிய அவர், கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி பிரதமர் மோடி உரையை குறித்துவைத்து வெற்று பேச்சு என கூறினார் என தெரிவித்தார்.
நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். சோகமான செய்திகள் நாடு முழுவதும் இருந்து தொடர்ந்து வருவதை நான் காண்கிறேன். கொரோனாவால் மட்டும் இந்தியா பாதிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வெற்று உரைகள் மற்றும் பயனற்ற பண்டிகைகள் தேவையில்லை. இந்தியாவுக்கு ஒரு தீர்வு தேவை என்று பதிவிட்டுள்ளார்.
தடுப்பூசி பாதுகாப்பு அதிகரிப்பதற்காக இந்த மாத தொடக்கத்தில் அரசாங்கத்தால் நான்கு நாள் “Tika Utsav” குறித்தும் குறிப்பிட்டார். இதனிடையே, நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, தொற்றுநோய்களின் அபாயகரமான எழுச்சிக்கு மத்தியில் மருத்துவ ஆக்ஸிஜன், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் கிடைப்பது குறித்து தேசத்திற்கு உறுதியளித்தார்.
நாட்டின் பல பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் வரும்போது, முழு பொதுமுடக்கம் கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என கூறினார். இரண்டாவது கொரோனா அலையால் இந்தியா, ஒரே நாளில் 3.14 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகி உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. 2,104 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…