கலைஞர் பிறந்தநாளுக்கு ஆடம்பரம் வேண்டாம்.! சமூக இடைவெளி முக்கியம் – முக ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

நாளை கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும் என்று முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல். 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தொண்டர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினம் தொடர்பாக தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு சில வேண்டுகோளை முன்வைத்து செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். 

அதில், கொரோனா அச்சுறுத்தலால் நாளை கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும் என்றும் கொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் அஞ்சலி செலுத்த போகும் போது யாரும் கூட்டம் கூடாமல் அவரவர் இருந்த இடத்திலேயே பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். குறிப்பாக அவரவர் இடங்களிலேயே சமூக இடைவெளியை கடைப்பிடித்து பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்