புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்..!

டி23 புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம். எனவே கொல்ல வேண்டாம்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் பகுதியில் அச்சுறுத்தி வரும் 13 வயதான புலி 4 பேரை கொன்றுள்ளது. ஏராளமான கால்நடைகளும் புலிக்கு இரையாகி உள்ளன. தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலை அளித்து வரும் புலியால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.  கடந்த சில நாட்களாக வனத்துறையினர் வைத்த கூண்டுகளில் புலி சிக்காததால் சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்க்கு இன்று தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  டி23 புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம். எனவே கொல்ல வேண்டாம். புலியை பிடிக்கும் போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு கூடாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நீலகிரியில் உலாவும் டி23 புலியைக் கொல்லும் திட்டம் எதுவும் இல்லை உயிருடன் பிடிக்க உத்தரவு என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில், புலியை பிடிப்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

author avatar
murugan