அரசியலில் மக்களின் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் – அண்ணாமலை

உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரசியலை பொறுத்தவரையில் மக்களின் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வந்து 5 மாத காலம் ஆகியிருந்தாலும் கூட, உள்ளாதவ்ஹி தேர்தலை பொறுத்தவரையில், மக்கள் நமது வேட்பாளர்களை பார்க்கிறார்கள். பாஜக இந்த முறை அனைத்து இடங்களிலும் நல்ல வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். பட்டியலின பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். எனவே உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.