திமுக தலைமையில் குழப்பம் உள்ளது-ராதாரவி

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவை விமர்சித்ததாக, நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுக இணைந்தார் நடிகர் ராதாரவி.
இதனிடையே சேலத்தில்  ராதாரவி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,கடந்த 3 ஆண்டுகளில் விஷால் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம், நாடக நடிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை.நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது, இது தானாக வெளியே வரும்.திமுக தலைமையில் குழப்பம் உள்ளது. சினிமா நடிகை பற்றி நான் பேசியதற்கு கட்சியில் இருந்து என்னை ஏன் நீக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.