“அதிமுகவுக்கு மாற்றான கட்சி தேமுதிக” – விஜயபிரபாகரன் பேச்சால் பரபரப்பு ..!

இன்று பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், அதிமுகவிற்கு மாற்றாக தேமுதிக இருக்கும். மக்கள் ஆதரவு தராததால் தான் தேமுதிக கூட்டணியை நாடவேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். வருகின்ற தேர்தலில் கூட்டணியாக இருந்தாலும், தனித்தாக இருந்தாலும் விஜயகாந்த் என்னசொன்னாலும் தயாராக இருங்கள்.

அத்திவரதர் போல விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வரும்போது பிரளயம் ஏற்படும் என தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் இருக்கும்போதே அதிமுகவிற்கு மாற்றான கட்சி தேமுதிக தான் என்று பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தர்மபுரியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை. அதிமுகவினரால் முதல்வராக்கப்பட்டவர்.

மேலும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று பழனிசாமி கூறி வரும் நிலையில், அதனை அவர்தான் விளக்க வேண்டும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan