திமுக -காங்கிரஸ் கூட்டணியில் பிரிவா? கே.எஸ்.அழகிரி விளக்கம்

  • காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்ற  கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
  • கூட்டணி பிரிய வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

இதன் பின்னர் இது குறித்து திமுகவின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு  கூறுகையில்,  கூட்டணி தர்மத்திற்கு தி.மு.க கட்டுப்படவில்லை என்று கே.எஸ். அழகிரி எங்கள்  ஸ்டாலினைக் குற்றம்சாட்டிய பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும். கூட்டணியில் பிரச்னை இருந்தால் ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி நேரில் தெரிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

எனவே இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில்,  திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள்.இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை.திமுக – காங்கிரஸ்  கூட்டணியில் சலசலப்பு இல்லை என்று தெரிவித்தார்.