மதுப்பிரியர்களே…இன்று முதல் அமல்;ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!

கொடைக்கானலில் இன்று முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,10 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும்.இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் பின்னர் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை ஒப்படைத்து,ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே,ஊட்டி,கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுசூழலை பாதுகாப்பதற்கு தொடர் முயற்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகத்தினர் எடுத்து வரும் நிலையில்,கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள்,விளைநிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வீசி செல்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே,நீலகிரி மாவட்டதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்பாட்டிலை திரும்ப கொடுத்து விட்டு கூடுதல் கட்டணமான ரூ.10-ஐ திரும்ப பெறும் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment