தோனியின் சாதனையை நெருங்கிய ரிசத் பண்ட் …!

இந்திய அணியின் ரிசத் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 95 ஒவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் அடித்தது.
அதேபோல் இந்திய பந்துவீச்சில் குல்தீப் ,உமேஷ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக சேஸ் 98 *, ஹோல்டர் 52 ரன்கள் அடித்தனர்.
இந்நிலையில் நேற்று  இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 101.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் அடித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரஸ்டான் சேஸ் 106,ஹோல்டர் 52 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் உமேஷ் 6,குல்தீப் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்நிலையில் இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 81 ஒவர்களில் 4 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் அடித்தது.
களத்தில் ரகானே 75,பண்ட் 85 ரன்களுடன் உள்ளனர்.ராகுல் 4,புஜாரா 10,கோலி 45,பிரிதிவி 70 ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் ரிசத் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். தொடர்ச்சியாக மூன்று இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் அடித்த 2-வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதாவது இங்கிலாலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்திருந்தார். அதன்பின் ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 92 ரன்னில் விளாசியிருந்தார். தற்போது 85 ரன்கள் அடித்துள்ளார்.
இதற்கு முன் மகேந்திர சிங் டோனி 2008 மற்றும் 2009-ல் இரண்டு முறை இந்த சாதனையை படைத்துள்ளார்.

Leave a Comment