நில்லு,நான் பீல்டிங் செட் பண்ணுறேன் !பேட்டிங்கின்போது வங்கதேச அணிக்கு பீல்டிங் செட் செய்த தோனி

நாளை 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.இதற்கு  முன்னதாக பயிற்சி போட்டிகள் நடைபெற்றது.இந்திய அணி முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி நியூ சிலாந்து அணியுடன் மோதியது.அதில் இந்திய அணி தோல்வியை தழுவியது.இரண்டாவது பயிற்சி போட்டி நேற்று நடைபெற்றது.இதில் இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது.ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

நேற்று இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பீல்டிங்,பந்துவீச்சு,பேட்டிங் ஆகும்.ஆனால் மிக முக்கியமானது பேட்டிங் ஆகும்.குறிப்பாக தோனி ,ராகுல் அடித்த  சதம் தான் முக்கிய காரணம் ஆகும். இந்த போட்டியின் நடுவே தோனி செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதாவது போட்டியின் நடுவே இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த களத்தில் தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.அப்போது வங்கதேச வீரர் சபீர் ரகுமான் பந்து வீச வந்தார்.

அந்த சமயத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த  தோனி திடீரென பந்துவீச வந்த ரகுமானை தடுத்து நிறுத்தினார்.நிறுத்தி வங்கதேச அணியில் பீல்டர் ஒருவரை நிறுத்தி அவரை பீல்டிங் செட் செய்த இடத்தில் நிற்குமாறு பீல்டருக்கு  அறிவுரை வழங்கினார்.தோனி சொன்னவுடன் பந்துவீச்சாளரும் பீல்டரை அதே இடத்தில் நிற்குமாறு கூறினார்.தான் பேட்டிங் செய்தபோதும் எதிர் அணிக்கு தோனி பீல்டிங் செட் செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.நீங்களே அந்த வீடியோவ பாருங்க …

Leave a Comment