கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.279340000 பரிசு,இறுதி போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு ரூ.139670000

12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெறுகிறது.நாளை தொடங்கி  ஜூலை  14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடைபெற உள்ளது.

இதில் பங்கு கொள்ளும் நாடுகளின் அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஐசிசி ஆனது உலககோப்பையை வெல்லும் அணிக்கு அளிக்கும் பரிசுத்தொகையை        அறிவித்துள்ளது.அதன் படி  இந்தாண்டு லீக் தொடர் முதல் இறுதிப்போட்டியில் இடம்பெறும் அணி மற்றும் வெல்லும் அணி ஆகியவற்றிற்கும் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி பரிசு தொகை விபரம் பற்றி காண்போம்:

இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.279340000 (4,000,000 டாலர் ) வழங்கபடும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இறுதி போட்டியில் தோல்வியை தழுவும் அணிக்கு ரூ.139670000  (20,00,000  டாலர்) பரிசுத்தொகை வழங்கப்படும்.

மேலும் அரையிறுதியில் தகுதிப்பெற்று அதில் தோல்வியை தழுவும்  அணிகளுக்கு ரூ.55868000 (40,000 டாலர்)பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

சுமார் ரூ.698350000 பரிசுத்தொகைகள் மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது உலகக்கோப்பை வரலாற்றில் இந்தாண்டு தான்  பரிசுத்தொகை அதிக அளவு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அளவிற்கு  இதுவரை உள்ள உலககோப்பையில் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment