தாராபுரம் பெரியார் சிலையை அவமதித்தவர் RSS பின்னணி உடையவர் போலீஸ் விசாரணையில் அம்பலம்..!!

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த தினமான கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அதிகாலை தாராபுரம் நகரின் மையப்பகுதியில் தீவுத் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையின் தலை மீது செருப்பு வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டிருந்தது. அந்த வெண்கலச் சிலையை சேதப்படுத்தவும் விஷமிகள் முயன்றிருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தாராபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் தாராபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சாதிய அமைப்பு மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் என்றும், உள்நோக்கம் ஏதுமின்றி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இவர் பெரியார் சிலையை தன்னிச்சையாக அவமதித்தார் என்றும் தகவல் வெளியானது.இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, நவீன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் என்ற நிலையில் நவீன்குமார் தன்னையறியாமல் குற்றத்தில் ஈடுபட்டார் என வாதிட்டு பிணையில் விடும்படி கோரினர். எனினும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில் பிணை வழங்கப்படவில்லை. அதேசமயம் அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் மனுச் செய்ததை ஏற்று 26ஆம் தேதி மாலை 5 மணி வரை காவல் துறை விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், மேற்படி நவீன்குமார் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற விபரம் அவரது சமூக வலைதளப் பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது. கடந்த 2017 அக்டோபர் 8ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் முகாமில் அவர்களது சீருடையான வெள்ளை சட்டை, காக்கி கால்சட்டையுடன் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியிலும் பங்கேற்றிருக்கிறார் என அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார். தாராபுரம் காவல் துறையினர் விசாரணையில் மேற்படி விபரங்கள் தெரியவந்துள்ளன.

DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

3 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

3 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

3 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

3 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

4 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

4 hours ago