#Breaking:நாடாளுமன்ற துணை சபாநாயகர் திடீர் ராஜினாமா!

இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராகப் போராடத் தொடங்கியதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ஏப்ரல் 1 அன்று அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.எனினும்,நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில்,ஜனாதிபதி,பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர்.

இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொணடார்.அதன்பின்னர், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நான்கு புதிய இடைக்கால அமைச்சர்களை நியமித்தார்.இதனிடையே,மத்திய வங்கி ஆளுநரும் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும்,இலங்கை தொழிலாளர் கட்சிக்கு(CWC) இரண்டு எம்பிக்கள் உள்ள நிலையில்,இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அக்கட்சி வாபஸ் பெற்றுள்ளது.இதனையடுத்து,இரண்டு எம்பிக்களில் இணை அமைச்சராக இருந்த ஜீவன் தொண்டைமான் ராஜினாமா செய்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

இதனிடையே,நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி விலகியுள்ளார்.இலங்கை சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.