புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது.

மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில்  புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.