இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக உள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியவியல் ஜனநாயகம் வலுவாக உள்ளது என “Dreams Meet Delivery” எனும் நூல் வெளியிட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் பேச்சு.

சென்னை போரூரில் “மோடி 2020 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி” நூல் வெளியிட்டு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது. ஆட்சியில் இருப்பதற்கு வரவில்லை, அடிப்படையில் மாற்றம் கொண்டுவர வந்துள்ளதாக மோடி கூறுவார். நரேந்திர மோடி ஆட்சியில் எங்கேயாவது ஊழல் என கேள்விப்பட்டுள்ளீர்களா என கேள்வி எழுப்பிய நிதியமைச்சர், குறுகிய மனப்பான்மையுடன் பிரதமர் மோடி செயல்படமாட்டார் என்றும் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து அந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் உரையாற்றினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment