#DelhiMCDPolls: 15 ஆண்டுகால பாஜக ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி! ஆம் ஆத்மி அமோக வெற்றி!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதால் தொண்டர்கள் கொண்டாட்டம்.

டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், டெல்லி மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி.

அதாவது, டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது. 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியில் ஆதிக்கத்தை செலுத்தி வந்த பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 9 மற்றும் மற்றவை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

134 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று அதிகாரத்தை பிடித்துள்ளது. இதனால் ஆம் ஆத்மி தொண்டர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். ஆம் ஆத்மி அலுவலகம் முன் திரண்டிருந்த கட்சி தொண்டர்கள், கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைப் பாராட்டி, நடனமாடி, கோஷம் எழுப்பி மகிழ்ச்சி அடைந்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment