#IPL2022: டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச முடிவு..!

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2022) 15வது சீசனின் இரண்டாவது ஆட்டத்தில்  டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.  இரு அணிகள் மோதும் போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

மும்பை அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, அன்மோல்பிரீத் சிங், கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், டைமல் மில்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி அணி:

பிருத்வி ஷா, டிம் சீஃபர்ட், மன்தீப் சிங், ரிஷப் பந்த் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், கலீல் அகமது, குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 30 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 16ல் மும்பையும், 14ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ஆண்டும் இருவருக்கும் இடையேயான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

author avatar
murugan