வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு… இந்தியா கேட் முன்பு டிராக்டர் எரித்து போராட்டம்… காவல்துறையினர் கைது…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தின் போது,  பஞ்சாப் மாநில இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த  15 முதல் 20 பேர், ஒரு டிரக்கில் டிராக்டரை ஏற்றிக் கொண்டு வந்து இந்தியா கேட் அருகே அந்த டிராக்டரை  இறக்கி, மன்சிங் சந்திப்பில் தீயிட்டுக் கொளுத்தினர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்த வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.  இளைஞர் காங்கிரசாரின் இந்த செயலுக்கு பாஜக தரப்பில் கடும்  விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது. டிராக்டர் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை தில்லி காவல்துறையினர்  கைது செய்தனர்.  மேலும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்து உள்ளனர்.
author avatar
Kaliraj