முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்க வேண்டும்.? நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜிரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என என்ற மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டெல்ர்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் கைது செய்து விசரணை காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இன்று அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டாலும், இன்னும் டெல்லி முதல்வராக அவர் தொடர்ந்து செயல்பட்டு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட காரணத்தால் அவர் டெல்லி முதல்வர் பொறுப்பில் நீடிக்க கூடாது. அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, அரவிந்த் கெஜ்ரிவால் மீது தண்டனை எதுவும் உறுதியாகவில்லை. அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் நீதிமன்றத்தில் இல்லை.  அதற்கான அதிகாரம் டெல்லி லெப்டினன்ட் கவர்னரிடமும், குடியரசு தலைவரிடம் மட்டுமேஉள்ளது.

டெல்லி மாநில ஆளுநர் , மாநிலத்தில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு அவர் தான் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குடியரசு தலைவர் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இதற்கு நீதிமன்றத்தில் அதிகாரம் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.