#BREAKING :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் -வாக்குப்பதிவு நிறைவு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி  இன்று டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

டெல்லியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,46,92,136 ஆகும். தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றறது.தற்போது டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் பதிவாகியுள்ளது .6 மணிக்குள் வாக்கு என்னும் மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.