சிம்ரன் செய்த செயலால் கடுப்பான விஜய் தந்தை! என்ன செஞ்சார் தெரியுமா?

Simran : சிம்ரன் செய்த செயலால் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.

இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் ஸ்டிட்டாக இருப்பார் என்று பலரும் கூறுவது உண்டு. படப்பிடிப்பு தளத்தில் பிரபலங்கள் சரியாக சொன்னதை செய்யவில்லை என்றாலும் உடனடியாக திட்டியும் விடுவார். அப்படி தான் ஒரு முறை சிம்ரன் செய்த காரியத்தை கடுப்பாகி அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் சிம்ரன், சிவாஜி, விஜய் ஆகியோரை வைத்து ஒன்ஸ்மோர் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் படபிடிப்பு எல்லாம் நடைபெறும் போது சரியாக காலை 7 மணிக்கு எல்லாம் கேமராவை வைத்து ஷூட்டிங்கை ஆரம்பித்துவிடுவாராம்.

அவர் அப்படி 7 மணிக்கு அவர் ஷூட்டிங் ஆரம்பித்துவிடுவார் என்பதால் படத்தில் நடிக்க பிரபலங்கள் அனைவரும் அதற்கு முன்பாகவே தயாராகி விடுவார்களாம். அப்படி அவர்கள் ரெடியாகவில்லை என்றால் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர்பயங்கர கோபம் அடைந்துவிடுவாராம். இதன் காரணமாகவே அனைவரும் விரைவாக ரெடியாகி கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவாராம்.

அப்படி தான் ஒரு முறை எல்லாரும் படப்பிடிப்புக்கு வந்தும் நடிகை சிம்ரனால் சரியான நேரத்திற்குள் வர முடியவில்லையாம். இதன் காரணமாக இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் பயங்கர கடுப்பாகி சிம்ரனை திட்டவும் செய்தாராம். திட்டியது மட்டுமின்றி அன்று படப்பிடிப்பு கேன்சல் என கூறிவிட்டு அவர் மட்டும் செல்லாமல் படப்பிடிப்பில் இருந்த அனைவருக்குமே பேக்அப் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். ஒரு நாள் சிம்ரன் தாமதமாக வந்த காரணத்தால் ஷூட்டிங்கையே அவர் நிறுத்தி வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.