இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து – அமைச்சர் சி.வி.சண்முகம்

இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், எம்ஜிஆரின் உண்மையான வாரிசு இரட்டை இலை சின்னம். ஆனால் அதற்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. இரட்டை இலை சின்னதாய் முடக்க மிகப்பெரிய சதித்திட்டம் செய்து வருகிறார்கள். தலைவர்கள் சிலர் ஏமாற்றலாம். ஆனால் தொண்டர்கள் ஏமாற்றமாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்