தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள்.!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்கள், 7 மாநகராட்சிகள் உள்ளிட்டவற்றில் புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக ஏடிஎஸ்பி தலைமையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்படும் என தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்