தமிழகத்தில் ஊரடங்கு மீறல்.! 2,39,239 பேர் கைது, ரூ.1,17,76,394 அபராதம்.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,24,952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,24,952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களில் வெளியே சுற்றிய 2,39,239 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியே சுற்றிய 2,03,256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,17,76,394 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்