வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி !!உடலை சுமந்து சென்ற ராஜ்நாத் சிங்!!

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியை சுமந்து சென்றார் மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்.

நேற்று காஷ்மீரில் உள்ள  ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது  புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அதேபோல்  சிஆர்பிஎப் வீரர் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியை சுமந்து சென்றார் மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்.

Leave a Comment