அணை உடைவதற்கு நண்டுகள் தான் காரணம் -அமைச்சர் தானாஜி! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்ததற்கு காரணம் நண்டுகள்  என நீர் சேமிப்பு துறை அமைச்சர் தானாஜி  கூறியுள்ளார். கடந்த  சில நாள்களாக மும்பையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் ஜூலை 3-ம் தேதி  பலத்த மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்தது.அதில் இருந்து வெளியேறிய தண்ணீர்  7 கிராமங்களில் புகுந்தது. அதில் அங்கு இருந்த பல வீடுகள் தண்ணீரில் அடித்து சென்றது.

மேலும் தண்ணீரில்  24 பேர் அடித்து செல்லப்பட்டனர்.அதில் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்நிலையில் அணை உடைவதற்க்கு காரணம் நண்டுகள் தான் என நீர் சேமிப்பு துறை அமைச்சர் சர் தானாஜி  கூறியுள்ளார்.

இதை பற்றி செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர்  தானாஜி , ஏராளமான நண்டுகள் அணையின் கரையை வலுவிழக்க செய்து விட்டது என உள்ளூர் மக்கள் பல முறை கூறியுள்ளனர். அதற்க்கு அதிகாரிகள் சில நடவடிக்கையும் எடுத்தனர்.

மேலும் அணையின்  நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக  மழை பெய்ததால் கூட உடைந்து இருக்கலாம். நீர் பிடிப்பு பகுதியில் 8 மணி நேரத்தில் 192 மி.மீ மழை பெய்தது.மேலும் 8 மணி நேரத்தில் 8 மீட்டர் நீர் உயர்ந்ததாகவும் தகவல் கிடைத்து உள்ளது என கூறினார்.

 

author avatar
murugan