#BREAKING: வாக்கு எண்ணிக்கை தடை விதிக்க நேரிடும்.., ஐகோர்ட் எச்சரிக்கை..!

கொரோனா 2-வது ஆலை பரவ தேர்தல் ஆணையம் தான் காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இரண்டு அறைக்கு பதிலாக மூன்று அறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வுமுன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் வாக்கு எண்ணிக்கையை உரிய பாதுகாப்புடன் நடத்துவதாகவும் தேர்தல் வாக்குப்பதிவு அன்று உரிய பாதுகாப்புடன் தேர்தல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதிகள் அதை ஏற்கவில்லை. தேர்தல் நடைபெற்ற அன்று தான் கொரோனா நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவிர பிரச்சாரம் தொடங்கிய போது எந்த விதமான தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

மேலும், கொரோனா 2-வது ஆலை பரவ தேர்தல் ஆணையம் தான் காரணம். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாவிட்டால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி நேரிடும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி, முகக்கவசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

author avatar
murugan