#BREAKING: சவுரவ் கங்குலிக்கு கொரோனா உறுதியானது..!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கொல்கத்தா உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 49 வயதான சௌரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவின் Omicron பரவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் கங்குலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பு காரணமாக சௌரவ் கங்குலி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சில நாட்கள் மருத்துவமனையில்சிகிக்சை பெற்ற நிலையில் சவுரவ் கங்குலி மாதம் இருமுறை மருத்துவமனைக்கு சென்று வந்தார். இருப்பினும், தொடர்ந்து பணியாற்றி சௌரவ் கங்குலிக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
murugan