தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் 2526 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 28 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 1082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதனை தடுப்பதற்கு, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 இந்நிலையில்,சென்னையை சேர்ந்த 48 வயது திருநங்கைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.