கர்நாடகாவில் விடாமல் துரத்தும் கொரோனா 1 உயிரிழப்பு மேலும் 33 பேர் பாதிப்பு

கர்நாடகாவில் கொரோனாக்கு மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .

கர்நாடகா மாநிலத்தில்  66வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இன்று ( வியாழக்கிழமை ) உறுதிப்படுத்தியுள்ளது .இதனால் அங்கு உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது.இந்த நபர் ஏப்ரல் 10 ம் தேதியிலிருந்து வெண்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது .

கர்நாடகாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது .இதுவே  அம்மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையாகும் .

பெலகாவி என்ற பகுதியில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இது இன்று பதிவானதில் பாதியாகும் .16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 4 பேர்  மற்றும் 5 மூத்த குடிமக்கள் உட்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan