சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை! ஆம்புலன்ஸ் வசதிக்காக பிரத்யேக எண் வெளியீடு!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ஆம்புலன்ஸ் வசதிக்கு பிரத்யேக எண் வெளியீடு.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சென்னையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 224 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை, சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆம்புலன்ஸ் வசதிக்கு பிரத்யேக எண்ணை வெளியிட்டுள்ளது. 044 – 40067108 என்ற எண்ணை வெளியிட்டு, 24 மணி நேரமும் இந்த என் செயல்படும் என்றும் அறிவித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.