ராயபுரத்தில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

ராயபுரத்தில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா  பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று  ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 42,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் ஒரே நாளில் 1,487  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,444 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையை பொருத்தவரை ராயபுரம் மண்டலத்தில் 5056 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தண்டையார்பேட்டை- 3928, தேனாம்பேட்டை – 3652, கோடம்பாக்கம்- 3267, அண்ணாநகர் – 2960, திரு வி.க.நகர் – 2772 அடையாறு- 1725, வளசரவாக்கம்- 1338, திருவொற்றியூர்-1113 பேருக்கு கொரோனா உள்ளது.